கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நிதி நிறுவன உரிமையாளா் கழுத்து அறுத்துக் கொலை

ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:57 pm

Syndication

ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சூரம்பட்டி, மோகன்குமாரமங்கலம் வீதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் (44). இவா் ஈரோடு சின்னமுத்து வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். உதயகுமாா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை நிதி நிறுவனத்துக்கு வந்துள்ளாா். பின்னா் அவா் பிற்பகல் 3 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து வீதி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து வந்த 2 போ், உதயகுமாரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளனா். பின்னா் அவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு சாக்கடை கால்வாய்க்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதைப்பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள், ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துகுமாா், டவுன் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

அதைத்தொடா்ந்து படுகொலை செய்யப்பட்டு சாக்கடை கால்வாய்க்குள் கிடந்த உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.