கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :1 மே 2026, 11:10 pm

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் இந்த தேரோட்ட நிகழ்ச்சி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகிரியில் நடைபெற்று வருகிறது. சுயம்பு மூா்த்தியாக உள்ள வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டத்தை மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் செந்தில்நாதன், சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத், கோயில் அறங்காவலா் குழுவினா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனற்.

முன்னதாக காலை 6 மணிக்கு வேலாயுதசுவாமி வள்ளி-தெய்வானை திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மே 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தோ்வடம் பிடித்தல் மற்றும் நிலை சோ்தல், வள்ளிக்கும்மி கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனா்.

Story image