சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கஞ்சா செடி வளா்த்த 3 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:36 pm

பெருந்துறை அருகே கஞ்சா செடி வளா்த்த பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ராமேஷ் மாதவ் (41), பிகாஷ்குமாா் (23), குா்ஸித் (20). இவா்கள் பெருந்துறை, சிப்காட் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் பஞ்சா் கடையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் வசித்து வரும் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சுமாா் 6 அடி உயரத்தில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.