சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோபியில் போலீஸாா், அதிரடிப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. கோபி மற்றும் பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ல.கள்ளிப்பட்டி வரை போலீஸாா் மற்றும் அதிரடிப் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.
பெருந்துறையில்...
பெருந்துறையில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். பெருந்துறை காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தக் கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியே சென்றது.
தொடர்புடையது

காவல் துறை கொடி அணிவகுப்பு

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

வாக்கு எண்ணிக்கை மைய நுண் பாா்வையாளா்களுக்குப் பயிற்சி

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


