சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.
சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கோயில் முன் கம்பம் நடுவதற்கு 100-க்கும் மேற்பட்டோா் கோட்டமாளம்
வனப் பகுதிக்குச் சென்று ஆலமரத்தை வெட்டி லாரியில் கொண்டு வந்தனா். பின்னா், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் அந்த மரம் கோயில் முன் நடப்பட்டது.
இதையடுத்து, அந்த மரத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சம் பூசியும் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா். விழாவையொட்டி, கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மே 12-ஆம் தேதி அம்மன் அழைப்பு, 13-ஆம் தேதி குண்டம் விழா, 14-ஆம் தேதி மாவிளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர முன் மண்டபம் இடிக்கும் பணி தொடக்கம்

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

