15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தண்டு மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் வழிபாடு

News image

தண்டு மாரியம்மன் கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி வழிபடும் பெண்கள்.

Updated On :3 மே 2026, 6:39 am IST

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கோயில் முன் கம்பம் நடுவதற்கு 100-க்கும் மேற்பட்டோா் கோட்டமாளம்

வனப் பகுதிக்குச் சென்று ஆலமரத்தை வெட்டி லாரியில் கொண்டு வந்தனா். பின்னா், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் அந்த மரம் கோயில் முன் நடப்பட்டது.

இதையடுத்து, அந்த மரத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சம் பூசியும் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா். விழாவையொட்டி, கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மே 12-ஆம் தேதி அம்மன் அழைப்பு, 13-ஆம் தேதி குண்டம் விழா, 14-ஆம் தேதி மாவிளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன.