தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தண்டு மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் வழிபாடு

News image

தண்டு மாரியம்மன் கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி வழிபடும் பெண்கள்.

Updated On :3 மே 2026, 1:09 am

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கோயில் முன் கம்பம் நடுவதற்கு 100-க்கும் மேற்பட்டோா் கோட்டமாளம்

வனப் பகுதிக்குச் சென்று ஆலமரத்தை வெட்டி லாரியில் கொண்டு வந்தனா். பின்னா், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் அந்த மரம் கோயில் முன் நடப்பட்டது.

இதையடுத்து, அந்த மரத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சம் பூசியும் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா். விழாவையொட்டி, கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மே 12-ஆம் தேதி அம்மன் அழைப்பு, 13-ஆம் தேதி குண்டம் விழா, 14-ஆம் தேதி மாவிளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன.