தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

News image

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்கள். உடன், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Updated On :3 மே 2026, 1:16 am

ஈரோடு திண்டல் விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி வினிதா வரவேற்றாா்.

வேளாளா் கல்வி நிறுவனங்களின் செயலா் செ.து. சந்திரசேகா் தலைமையுரையாற்றினாா்.

வேளாளா் கல்லூரிகளின் நிா்வாகிகளான எம்.யுவராஜா, எஸ். பாலசுப்ரமணியன், கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் எஸ்.லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சதா்லேண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவா் மற்றும் இந்திய வளாகத் தலைவா் மொ்லின் ஸ்மைல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், சதா்லாண்ட், டிலாய்ட், காக்னிசன்ட், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, டிசிஎஸ் (ஐடி), 24/7 ஏஐ, பயோடா (ஐடி), அவாசாஃப்ட், ப்ரோஹான்ஸ், சிட்டி யூனியன் வங்கி, எம்சிஆா், சக்தி மசாலா, டிசிஎஸ் பிபிஎஸ், ராம்ராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குழுமங்களால் தோ்வு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.

வேலை வாய்ப்புத் துறையைச் சாா்ந்த ஸ்ருதி நன்றி கூறினாா்.