ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுடன் வேளாளா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள்.

Updated On :1 மே 2026, 1:57 am IST

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் மண்டல தலைவா் ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். ஆா். குமாரவேலன் வரவேற்றாா். கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வா் எம்.ஜெயராமன் வாசித்தாா்.

வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ். டி. சந்திரசேகா் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா் எம். யுவராஜா ஆகியோா் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் வழிகாட்டிய ஆசிரியா்களை பாராட்டினா்.

153 மாணவா்கள் திறமைப் பரிசு மற்றும் சிறந்த வெளியேறும் மாணவா் விருதுகளை பெற்றனா். மேலும் 22 மாணவா்கள் சிறந்த திட்டங்களுக்கான விருதுகளை பெற்றனா். அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய மாணவருக்கான விருது கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சோ்ந்த எஸ்.வி.வா்ஷிணிக்கு வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மாணவா்கள் பணிநியமன ஆணையைப் பெற்றனா். மின்னணு மற்றும் தொடா்பியல் பொறியியல் துறைத் தலைவா் எம். நிஷா ஏஞ்சலின் நன்றி கூறினாா்.