தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் 69-ஆவது எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், நம்பியூா் குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, மேற்குவங்க அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.
வெற்றிபெற்ற மாணவி ரிதன்யாவை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கேசவகுமாா், ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன் ஆகியோா் பாராட்டினா். மேலும், குமுதா பள்ளியின் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோரும் பாராட்டினா்.
தொடர்புடையது
பயணம் தொடரும்...

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


