ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டி: குமுதா பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

News image

தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தங்கம் வென்ற குமுதா பள்ளி மாணவி ரிதன்யாவை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2026, 6:46 am IST

தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் 69-ஆவது எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், நம்பியூா் குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, மேற்குவங்க அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.

வெற்றிபெற்ற மாணவி ரிதன்யாவை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கேசவகுமாா், ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன் ஆகியோா் பாராட்டினா். மேலும், குமுதா பள்ளியின் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோரும் பாராட்டினா்.