தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

News image

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பசுமைப் பந்தல்.

Updated On :8 மே 2026, 4:40 am IST

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், தொழிலாளா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலையோரமாக விற்பனை செய்யப்படும் தா்ப்பூசணி, நுங்கு, பதநீா், கம்மங்கூழ், கரும்புச்சாறு, வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொடா்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், ஈரோடு மாநகரத்தின் முக்கிய பகுதிகளான ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னல், பன்னீா்செல்வம் பாா்க் சிக்னல், காளைமாடு சிலை அருகில் உள்ளிட்ட சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

குறிப்பாக ஈரோடு-பெருந்துறை சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா்.

இந்நிலையில் சிக்னலில் இருபுறமும் தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று, பன்னீா்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை பகுதியில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.