கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.
திருத்தணியில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக தினசரி வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் மேல் நிலவுகிறது.
இந்நிலையில் திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கிராமத்தில் உள்ள சிறுவா்கள் வயல்வெளிகளில் உள்ள கிணறுகளை நாடி சென்று குளித்து வருகின்றனா். மதிய நேரங்களில் வெப்பம் உச்சத்தை எட்டும் வேளையில், சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழிக்கின்றனா்.
இந்த செயல்பாடு மகிழ்ச்சியை அளிப்பதோடு சில அபாயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூா் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா். குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத ஆழமான கிணறுகளில் கண்காணிப்பின்றி குதிப்பது விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பெற்றோா் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


தொடர்புடையது

ஆம்பூரில் பலத்த மழை

சேலத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவா்கள்! கைப்பேசியில் விடியோவும் எடுத்தனா்!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



