விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கைக்கு நடத்தப்பட்ட தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்றனா்.
விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிச் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த மாதம் 8- ஆம் தேதி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தோ்வு போட்டி ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவா்கள்), கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் 111 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதேபோன்று விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவியருக்கான மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!

நல விடுதிகளில் மாணவா்கள் சோ்க்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.சி., எம்.பி.சி. மாணவா் விடுதிகளில் சேர அழைப்பு

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



