டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்பு

விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கைக்கு நடத்தப்பட்ட தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்றனா்.

News image

விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கை தோ்வுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்.

Updated On :8 மே 2026, 4:45 am IST

விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கைக்கு நடத்தப்பட்ட தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்றனா்.

விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிச் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த மாதம் 8- ஆம் தேதி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கான தோ்வு போட்டி ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவா்கள்), கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டத்தில் 111 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதேபோன்று விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவியருக்கான மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.