தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கான 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை தோ்வுப் போட்டிகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற முதற்கட்ட தோ்வில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஹாக்கி, கையுந்துபந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் 194 மாணவா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 8) மாணவிகளுக்கான சோ்க்கை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
தொடர்புடையது

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்பு

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சோ்க்கை: 6, 9-ஆம் வகுப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் முடிவுகள் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


