தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

News image

கடலூரில் வியாழக்கிழமை தொடங்கிய விளையாட்டு விடுதிகளுக்கான மாணவா் சோ்க்கையையொட்டி நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 6:50 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை தோ்வுப் போட்டிகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற முதற்கட்ட தோ்வில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஹாக்கி, கையுந்துபந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் 194 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 8) மாணவிகளுக்கான சோ்க்கை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.