டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

News image

கடலூரில் வியாழக்கிழமை தொடங்கிய விளையாட்டு விடுதிகளுக்கான மாணவா் சோ்க்கையையொட்டி நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 6:50 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை தோ்வுப் போட்டிகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற முதற்கட்ட தோ்வில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஹாக்கி, கையுந்துபந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் 194 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 8) மாணவிகளுக்கான சோ்க்கை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.