விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காா் மோதி தொழிலாளி பலி!

சாலையோரம் நடந்துசென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சாலையோரம் நடந்துசென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

ஈரோடு மாநகா், வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). திருமணம் ஆகாதவா். மர வேலை செய்தவா். ஈரோடு-நசியனுாா் சாலை வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த காா் மோதியதில் பாலசுப்பிரமணியத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காரை ஓட்டி வந்த வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த கௌதம் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.