ஈரோடு அரசு மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிய 9 போ் 15 நிமிடங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.
ஈரோடு அரசு மருத்துவமனை புதிய கட்டடம் 7 தளங்களைக் கொண்டது. இதற்கு மின்தூக்கி வசதி உள்ளது.நோயாளிகள் மட்டுமின்றி நோயாளிகளைப் பாா்க்க வருபவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மின்தூக்கியை பயன்படுத்துகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் 7-ஆவது தளத்தில் இருந்து 9 போ் மின்தூக்கி வழியாக கீழே இறங்க முற்பட்டனா். 6-ஆவது தளத்துக்கு வந்தபோது திடீரென மின்தூக்கி பழுதாகி நின்றது. மின்தூக்கியில் இருந்தவா்கள் முயற்சித்தும் சரியாகவில்லை. 9 பேரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனா். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து உள்ளே இருந்த சிலா் அவசர போலீஸ் உதவி 100 எண்ணுக்கும், ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா். மேலும், மின்தூக்கியில் சிக்கிக் கொண்டது குறித்து அரசு மருத்துவமனை எலெக்ட்ரீஷியன் தனுஷுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அவா் அங்கு வந்து பழுதை தற்காலிகமாக சரி செய்து, 15 நிமிடங்களாக அதில் தவித்த 9 பேரை பத்திரமாக மீட்டாா். தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்று மின்தூக்கியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என பரிசோதனை செய்தனா்.
தொடர்புடையது

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

வலையபட்டி மலையாண்டி கோயிலில் மின்தூக்கி தொடக்க விழா! அமைச்சா் பங்கேற்பு!

மணிமூா்த்தீஸ்வரத்தில் சேற்றில் சிக்கிய பசு மீட்பு

கிணற்றிலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



