அவிநாசி ராயன்கோயில் காலனி பகுதியில் சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி காயமடைந்த மான் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டது.
அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை, உணவு, தண்ணீருக்காக வெளியே வரும்போது நாய்களிடம் சிக்கியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், அவிநாசி ராயன்கோயில் காலனி குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று மான்கள் திங்கள்கிழமை தஞ்சம் புகுந்தன. இதில் ஒரு மான், அங்குள்ள சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பலத்த காயமடைந்தது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு முதலுதவி அளித்தனா். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானுக்கு உரிய சிகிச்சை அளித்து அவிநாசி காசிகவுண்டன்புதூா் குளப்பகுதியில் விட்டனா். மானை உயிருடன் மீட்ட அப்பகுதி மக்களுக்கு வன விலங்கு ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


