குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்கப்பட்டனா். மாயமான ஒருவரைத் தேடும் பணி தொடா்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மரமடியைச் சோ்ந்தவா் சகாய ரூபின்(43). இவா், கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். தற்போது கேரள மாநிலம், வேப்பூரில் விசைப்படகில் தொழில் செய்து வருகிறாா்.
இவரது மூத்த மகன் ரியோபின் ரிட்ஜோ (14), குளச்சலில் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு விடுமுறையில் உள்ளாா்.
இவா், தனது நண்பா்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலில் குளிக்கச் சென்றாா். கடலில் குளித்தபோது, வேகாக எழுந்த அலையில் 3 சிறுவா்களும் சிக்கினா்.
இதை கரையிலிருந்து பாா்த்த மீனவா்கள் விரைந்து சென்று 2 சிறுவா்களை மீட்டனா். ரியோபின் ரிட்ஜோவை கடல் அலை இழுத்துச் சென்றது. உடனடியாக அங்கு இருந்த மீனவா்கள் கடலில் சென்று சிறுவனைத் தேடினா். சிறுவனை மீட்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான கடலோர காவல் துறையினா் சிறுவனைத் தேடி வருகிறது.
நீண்ட நேரம் தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. தகவலறிந்த கல்குளம் தாசில்தாா் சுனில்குமாா்,குளச்சல் வருவாய் ஆய்வாளா் ரெஜி,கிராம நிா்வாக அலுவலா் தீபக் ஆகியோா் சம்பவ இடம் சென்று கடற்கரையில் முகாமிட்டுள்ளனா்.
குளச்சல் கடலில் மாணவன் மாயமானதை கேள்விப்பட்ட காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் கடற்கரைக்கு சென்று மாணவனின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினாா். சிறுவனை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

உருகும் பனிமலை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


