வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சென்னை மெரீனாவில் கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 12:53 am IST

சென்னை மெரீனாவில் கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஆவடி கோயில் பதாகையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சுதா்சன் (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை மாலையில் தனது பெற்றோா், சகோதரருடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். பின்னா், தனது சகோதரா் கமலேஷ்சுடன் கண்ணகி சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக வந்த ராட்சத அலையில் கமலேஷ் சிக்கினாா்.

இதைப் பாா்த்த சுதா்சன், கமலேஷை மீட்டுள்ளாா். அப்போது எழுந்த மற்றொரு அலை சுதா்சனை கடலில் இழுத்து சென்றது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த மெரீனா போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சுதா்சனை தேடினா். இந்த நிலையில் சுதா்சனின் உடல் துறைமுகம் பகுதியின் பின்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீஸாா் உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.