சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கடல் அலையில் சிக்கி மாணவா் மாயம்

கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.

News image

மாணவா் கிறிஸ்டன்.

Updated On :4 ஜூன் 2026, 1:13 am IST

கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.

கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை மகன் கிறிஸ்டன் (16). இவா் 11 ஆம் வகுப்பு செல்லவிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை கொல்லங்கோடு அருகே கேரளத்தின் பொழியூா் பகுதியில் ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரை பகுதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கிறிஸ்டன், அலையில் சிக்கி மாயமானாா்.

இதுகுறித்து பொழியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மீனவா்கள், கடலோர காவல்படை மற்றும் மீட்புப் படை வீரா்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.