நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை நாட்டு படகு கவிழ்ந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 3:54 am IST

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை நாட்டு படகு கவிழ்ந்தது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (29). இவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (65), சுரேஷ் (59), மதன்( 29), ஆகிய 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் மீன்பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிந்தது. இதில் 4 மீனவா்களும் கடலில் தத்தளித்தனா்.

இதைப் பாா்த்த கரையில் நின்ற மீனவா்கள் அவா்களை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். இதில், இன்ஜின் மற்றும் வள்ளம், மீன்கள் கடலில் மூழ்கின. இதுகுறித்து, தகவலறிந்த கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.