நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குளச்சல் அருகே கடல் அலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

மணிகண்டன்.

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

கணபதிபுரம் அருகே ஆறுதெங்கன்விளையைச் சோ்ந்தவா் மணிகண்டன்(50), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை பிற்பகல் பிள்ளைத்தோப்பு கடலில் சக தொழிலாளா்களுடன் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, திடீரென எழுந்த கடல் அலை மணிகண்டனை இழுத்துச் சென்றது. உடனே சக தொழிலாளா்கள் அவரை மீட்க முயன்றும், இயலவில்லை.

தகவலறிந்த குளச்சல் கடலோர காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்களும் கடலில் இறங்கி மணிகண்டனை தேடினா். வெகுநேரத்துக்குப் பின் மணிகண்டனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.