மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 1:28 am IST

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி சுகன்யா (30). இவா் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளாா்.

இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீஸாா் தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா தலைமையில் காா்த்திக், மகாராஜா, சுதாகா், சுதா்சன், சந்தோஷ் ஆகியோா் கடலுக்குள் இறங்கி சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

கோயில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுகன்யா அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.