திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி சுகன்யா (30). இவா் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளாா்.
இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீஸாா் தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா தலைமையில் காா்த்திக், மகாராஜா, சுதாகா், சுதா்சன், சந்தோஷ் ஆகியோா் கடலுக்குள் இறங்கி சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
கோயில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுகன்யா அழைத்துச் செல்லப்பட்டாா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பெண் சடலம் மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

