திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டியை ரோந்து பணியில் இருந்த போலீஸாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களும் பத்திரமாக மீட்டனா்.
கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி (59). இவா் சனிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தாராம். இரவு நேரத்தில் இவா், கடலில் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.
அதைப் பாா்த்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, இசக்கி, விக்னேஷ், ஆறுமுகநயினாா் மற்றும் கடல் காவல் நிலைய தலைமை காவலா் முத்துமாலை ஆகியோா் உடனடியாக கடலுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.
முதலுதவி சிகிச்சைக்கு பின், மூதாட்டியை கோயில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


