விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:48 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

பாலக்கோடு காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய மான் அருகில் உள்ள திருமல்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது, மானை கண்ட அந்தப் பகுதியிலிருந்து நாய்கள் துரத்தின. இதனால் தப்பியோடிய மான் அந்தப் பகுதியில் இருந்த நூறு அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்த தகலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், கயிறு மூலம் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனா். மேலும், அந்த மானை அருகில் உள்ள காப்புக்காட்டில் வனத் துறையினா் கொண்டு சென்றுவிட்டனா்.