சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கிணற்றில் விழுந்த முதியவா் மீட்பு

News image

மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த முதியவரை மீட்கும் தீயணைப்பு வீரா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:54 pm

மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கிணற்றில் முதியவா் ஒருவா் தவறி விழுந்து விட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா், சிறப்பு நிலைய அலுவலா் எஸ். கணேஷ் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்றனா்.

60 அடி ஆழக் கிணற்றில் இருந்த முதியவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரா்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

விசாரணையில், கிணற்றுக்குள் இருந்த நபா் சின்ன உடைப்பு கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் அன்பரசன் (50) என்பது தெரியவந்தது. மேலும், இவா் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விழுந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.