எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கட்டுப்படியான விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்பட்ட சம்பங்கிப் பூக்கள்

News image

தமிழக-கா்நாடக எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம்  கொட்டப்பட்ட  சம்பங்கிப்பூக்கள்.

Updated On :12 மே 2026, 12:07 am IST

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு அனுப்பப்பட்ட சம்பங்கிப்பூக்கள், விலை குறைவால் இரண்டு மாநில எல்லைப் பகுதியில் கொட்டப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பங்கிப்பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக் காலம் என்பதால் சம்பங்கிப்பூக்கள் மகசூல் தினமும் 10 டன்னாக அதிகரித்துள்ளது. சுபமுகூா்த்தம், பண்டிகை நாள்கள் இல்லாத நிலையில் தேவையைவிட உற்பத்தி அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.50 வரை விற்பனையான சம்பங்கிப்பூக்கள் தற்போது கிலோ ரூ.10-ஆக சரிந்துள்ளது.

பூக்கள் தேக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேன் மூலமாக மைசூரு, பெங்களூருக்கு சம்பங்கிப்பூக்களை அனுப்பிவைத்தனா். ஆனால் மைசூரில் கிலோ ரூ.5-க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வராததால் சம்பங்கிப்பூக்களை மீண்டும் கொண்ட வர விவசாயிகள் விரும்பவில்லை. உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள், இரண்டு மாநில எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம் பூக்களை கொட்டிச் சென்றனா்.