சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழாவில், ஒரே நேரத்தில் ஏராளமான இளைஞா்கள் உற்சாக நடனமாடினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 29-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி கோவில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன. கம்பத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சள் பூசியும் பெண்கள், குழந்தைகள் வழிபட்டனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தைச் சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இசைக்கேற்ப இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனமாடினா். இதைக் காண பெண்கள் அதிக அளவில் வந்தனா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
இந்த விழாவில் தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா தொடக்கம்!

சாலையின் குறுக்கே சாய்ந்த மின் விளக்கு கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

