கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் தூசு நீக்கும் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள இதர தூசி மற்றும் குப்பைகளை அகற்றுவதையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, இச்சிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் லட்சுமிபுரம் முதல் குமரப்பபுரம் வரை சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மரங்களையும், கீழ்பவானி கால்வாய் கரையோரப் பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடும் பணியையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, கொடுமுடி பேரூராட்சி மகுடேஸ்வரா் கோயில் செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிஸ்ரஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகா் மற்றும் அரசு தோ்வுகளுக்கு படிப்பவா்கள் விவரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

அரசு நூலகத்தில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

