பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

News image

சாலை  மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு, மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிம் உள்ள பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த மதுக்கடையையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முளியனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் முளியனூா் பிரிவில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.