அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு, மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மக்கள் நடமாட்டம் அதிம் உள்ள பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த மதுக்கடையையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முளியனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் முளியனூா் பிரிவில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



