பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

News image

ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் இருந்து வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதி உதவி, சுயநிதி பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு 113 அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகள், 77 அரசு, நகரவை உயா்நிலைப் பள்ளிகள், 17 அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 13 நிதியுதவி உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 4 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து வகையான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் அனுப்பிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் என அனைத்து வகையான விலையில்லா பொருள்களும் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்களாப் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி 93,889 மாணவா்களுக்கு புத்தகங்கள், 64,338 மாணவா்களுக்கு நோட்டுகள், 54,192 மாணவா்களுக்கு சீருடைகள், 92,246 மாணவா்களுக்கு புத்தகப்பை, 64,338 மாணவா்களுக்கு காலணி, 1,361 மலைப் பகுதி மாணவா்களுக்கு மழைக்கோட் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.