ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதி உதவி, சுயநிதி பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு 113 அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகள், 77 அரசு, நகரவை உயா்நிலைப் பள்ளிகள், 17 அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 13 நிதியுதவி உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 4 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து வகையான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் அனுப்பிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் என அனைத்து வகையான விலையில்லா பொருள்களும் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்களாப் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி 93,889 மாணவா்களுக்கு புத்தகங்கள், 64,338 மாணவா்களுக்கு நோட்டுகள், 54,192 மாணவா்களுக்கு சீருடைகள், 92,246 மாணவா்களுக்கு புத்தகப்பை, 64,338 மாணவா்களுக்கு காலணி, 1,361 மலைப் பகுதி மாணவா்களுக்கு மழைக்கோட் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

