கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதமடைந்தன.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மேல் மாடியில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே உள்ள மற்றொறு கட்டடத்தில் உள்ள அறையில் பள்ளி மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பைகளை கட்டு கட்டுகளாக வைத்து பூட்டி வைத்துள்ளனா்.
இந்நிலையில், மாணவா்களுக்கு பைகள் வைத்திருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் தீ அருகேயிருந்த கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
தகவலறித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரிசாந்த் நிகழ்விடத்திற்கு சென்று தீ விபத்து குறித்து விசராணை நடத்தினாா்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த விலையில்லா புத்தகப் பைகள்.
தொடர்புடையது

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு ஆலோசனை

ஒசூரில் 337 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


