விடுமுறை மற்றும் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் திரண்ட நிலையில், தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏமாற்றமடைந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா தலங்கள், நீா்வீழ்ச்சிகளை நோக்கி பொதுமக்கள் வந்து வெயிலின் தாக்கத்தை தணித்து வருகின்றனா்.
அதன்படி கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணைக்கு நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கோவை, திருப்பூா், சேலம், நாமக்கல், கரூா், உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைத் சோ்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காலை முதலே வரத் தொடங்கினா்.
தற்போது தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாள்களாக கொடிவேரி அருவியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
இதனால் அருவிப் பகுதியில் லேசாக வெளியேறும் தண்ணீரிலும், பாறை இடுக்குகளில் வெளியேறும் தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து அருவிக்கு கீழே பவானி ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளுடன் குளித்தும், விளையாடியும், பரிசல் சவாரி செய்தும் சென்றனா்.
தொடர்புடையது

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு! 300 கன அடியாகக் குறைப்பு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

