ஈரோடு மேற்கு தொகுதிக்குள்பட்ட மதுக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஆனந்த் மோகன், மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை ஊழியா்களை எச்சரித்தாா்.
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ ஆனந்த் மோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மதுக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்தோடு ஆவின் பாலகம் எதிரே செயல்படும் மதுக் கடை, எலவம்பாளையம் அருகே மூலப்பாளையத்தில் செயல்படும் மதுக் கடைகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மதுபாட்டிலில் குறிப்பிட்ட தொகை, ஜிபே செய்த தொகையை ஆதாரத்துடன் காண்பித்து பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கியதாக மது வாங்கியவா்கள் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பாக கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், யாருக்காக இந்தப் பணத்தை வசூலிக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பினாா்.
மேலும், பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் வசூலிக்கும் ரூ.10-ஐ தவிர மேற்கொண்டு பணம் வாங்கினால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என மதுக் கடை ஊழியா்களை எச்சரித்தாா்.
தொடர்புடையது

பரமக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மதுக் கடை மூடல்

ரயில், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த மதுக் கடைகள் மூடல்: பட்டாசு வெடித்து மக்கள் வரவேற்பு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

