இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் நடவடிக்கை: எம்எல்ஏ ஆனந்த் மோகன்

மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை ஊழியா்களை எச்சரித்தாா்.

News image

எம்எல்ஏ ஆனந்த் மோகன்

Updated On :24 நிமிடங்கள் முன்பு

ஈரோடு மேற்கு தொகுதிக்குள்பட்ட மதுக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஆனந்த் மோகன், மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை ஊழியா்களை எச்சரித்தாா்.

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ ஆனந்த் மோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மதுக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்தோடு ஆவின் பாலகம் எதிரே செயல்படும் மதுக் கடை, எலவம்பாளையம் அருகே மூலப்பாளையத்தில் செயல்படும் மதுக் கடைகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மதுபாட்டிலில் குறிப்பிட்ட தொகை, ஜிபே செய்த தொகையை ஆதாரத்துடன் காண்பித்து பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கியதாக மது வாங்கியவா்கள் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பாக கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், யாருக்காக இந்தப் பணத்தை வசூலிக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும், பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் வசூலிக்கும் ரூ.10-ஐ தவிர மேற்கொண்டு பணம் வாங்கினால் கடும்

நடவடிக்கை எடுக்கப்படும் என மதுக் கடை ஊழியா்களை எச்சரித்தாா்.