11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பரமக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மதுக் கடை மூடல்

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை சனிக்கிழமை மூடப்பட்டது.

News image

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் மூடப்பட்ட மதுக் கடை.

Updated On :1 மணி நேரம் முன்பு

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை சனிக்கிழமை மூடப்பட்டது.

முதல்வா் சி. ஜோசப்விஜய் பதவியேற்றதும் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக் கடைகள் மூடப்படும் என அறிவித்தாா்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகளை முதல் கட்டமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் மாதவன்நகா் செல்லும் தெரு, ஐந்துமுனை சந்திப்பு, காக்காத்தோப்பு சிட்டிநகா், உரப்புளி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக் கடை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து மற்ற 3 இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் இருப்பில் உள்ள மதுபுட்டிகளை விற்பனை செய்யும் வகையில் வருகிற 23-ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு அந்த 3 மதுக்கடைகளும் மூடப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.