ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே லாரியின் பின்புறம் மோதிய மற்றொரு லாரியின் ஓட்டுநா் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, விளாவுராணிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சபரீசன் (26), லாரி ஓட்டுநா். இவா், சேலத்திலிருந்து காய்கறிகள் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு கன்டெய்னா் லாரியில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு, சமத்துவபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில், சபரீசன் ஓட்டிச் சென்ற லாரி மோதியது.
இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட சபரீசன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா், பவானி தீயணைப்புப் படையினா் உதவியுடன் சபரீசன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









