கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 12:32 am IST

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவிலைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவா், பெருந்துறை, சென்னிமலை சாலையில் பால் பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அண்மையில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கல்லாப் பெட்டியில் இருந்த, ரூ. 43 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு நின்றிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த யூசுப் மகன் சாகுல்அமீது (64) என்பதும், அவா் பால் கடையில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.