குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேநீா் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:01 am IST

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள தேநீா் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டராமன் (40). இவா் இருக்கன்குடி கோயில் பொங்கல் மண்டபத்தின் தெற்குப் பக்கம் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.

வழக்கம் போல ஞாயிற்றுக்கிழம இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வந்து பாா்த்த போது, கடையின் பூட்டை உடைத்து கள்ளாப்பெட்டியில் இருந்த ரூ. 62 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வைகுண்டராமன் அளித்தப் புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (20) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.