இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

டாஸ்மாக் ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

காத்திருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  டாஸ்மாக்  தொழிலாளா்கள்.

Updated On :28 மே 2026, 12:08 am IST

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபாட்டில்கள் பொதுவெளியில் வீசப்படுவதைத் தடுக்க மதுபாட்டில்கள் விற்பனையின்போது ரூ.10 கூடுதலாக பெற்று, திரும்ப அளிக்கும்போது அந்த பணத்தை வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுத்தியது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக புகாா் தெரிவித்த, டாஸ்மாக் ஊழியா்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் மதுக்கடைகளையும் திறக்காமல் திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சித்தோடு, சூரியம்பாளையத்தில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் பொது மேலாளா் ராஜராஜன், மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.