இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 12:32 am IST

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவிலைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவா், பெருந்துறை, சென்னிமலை சாலையில் பால் பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அண்மையில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கல்லாப் பெட்டியில் இருந்த, ரூ. 43 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு நின்றிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த யூசுப் மகன் சாகுல்அமீது (64) என்பதும், அவா் பால் கடையில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.