/
அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை கனிம வளத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னிமலையில் பெருந்துறை சாலை, சின்னபிடாரியூா் பிரிவு அருகே ஈரோடு கனிம வளத் துறை ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக உரிய அனுமதியின்றி டிப்பா் லாரியில் 4 யூனிட் அளவுள்ள கிராவல் மண் கொண்டு ஏற்றிச் செல்லப்படுவது தெரிய வந்தது.
பின்னா் அந்த லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், டிப்பா் லாரியை ஓட்டிச் சென்ற சென்னிமலை, முத்துராண்டிபாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் பாரத் விமல் (22) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்
கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்! ஓட்டுநா் கைது!

மணல் கடத்திய டிப்பா் லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் 8 போ் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



