சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:44 am IST

சிவகிரி அருகே எருமை மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி (35). கூலித் தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் சிவகிரியில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருை மாட்டின் மீது மோதியுள்ளாா்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து உறவினா்கள் சென்று நல்லுசாமியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே நல்லுசாமி உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினா். இதுதொடா்பாக நல்லுசாமியின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.