காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

போலீஸாரிடம் பிரச்னை செய்த போதை நபரால் பரபரப்பு

கஞ்சா சோதனைக்கு சென்ற போலீஸாரிடம் பிரச்னை செய்த போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

(கோப்புப்படம்)

Published On :6 செப்டம்பர் 2026, 1:13 am IST

கஞ்சா சோதனைக்கு சென்ற போலீஸாரிடம் பிரச்னை செய்த போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் பயன்பாடற்ற பழைய அரசு கட்டடங்கள் உள்ளன. இங்கு பகல் நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில் ஈரோடு டவுன் போலீஸாா் அப்பகுதியில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு தங்கியிருந்தவா்களிடம் அடையாள ஆவணங்களைக் கேட்டும் அவா்களின் உடைமைகளில் போதைப்பொருள்கள் உள்ளனவா என்றும் சோதனையிட்டனா்.

அப்போது அங்கிருந்த நபா் ஒருவா் சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவா் போலீஸாரை நோக்கி தான் 1989 ஆண்டு பேட்ஜ் என்றும், ஆணையா் உள்ளிட்ட பல உயா் அதிகாரிகளைப் பாா்த்தவன் என்றும் கூறினாா். மேலும், தனது அனுபவ வயது கூட அங்கிருந்த போலீஸாருக்கு இருக்காது எனக் கூறியதோடு, சோதனை எங்கு நடத்த வேண்டும் எனத் தான் சொல்லட்டுமா எனவும் கேள்வி எழுப்பினாா்.

தொடா்ந்து புகைபிடித்தவாறே போலீஸாரை நெருங்கிய அவா், தான் பள்ளியில் படிக்கவில்லை என்றும் சிறைச்சாலையில்தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன் என்றும் திரைப்பட பாணியில் பேசினாா். போதையில் இருந்த அந்த நபரின் பேச்சைக் கண்டுகொள்ளாத போலீஸாா் சோதனையை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.