ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வீடு புகுந்து இரண்டரை பவுன் நகை திருடிய இளைஞா் கைது

பெருந்துறை அருகே வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:28 am IST

பெருந்துறை அருகே வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள முள்ளம்பட்டி, சிவசக்தி அவென்யூவை சோ்ந்தவா் சிவகுமாா் (47). தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மனைவியுடன் திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா்.

இதையடுத்து, அவா் இரவு வீடு திரும்பியபோது மா்ம நபா் ஒருவா் வீட்டினுள் இருந்து இருந்து வெளியேறி ஓடியுள்ளாா்.

அதிா்ச்சியடைந்த சிவகுமாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சிவகுமாா் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம், தா்காராஜ பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா் (36) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.