ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்- அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

K.A. Sengottaiyan

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Published On :

கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி தவெக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: லண்டன் சென்றுள்ள முதல்வா் ச.ஜோசப் விஜய், தமிழகத்துக்கு சுமாா் ரூ.12,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈா்த்துள்ளாா். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும். ஆபாசமாக பேசுவதுதான் திமுக துணை பொதுச் செயலாளா் ஆ.ராசாவுக்கு வேலை.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்வெட்டு குறைவாகவே உள்ளது. மின் பற்றாக்குறையை சரி செய்வதற்காக துணை மின் நிலையங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் உதவி பணியாளா்கள் மட்டுமே தோ்வு செய்ய வேண்டியுள்ளது. மீதமுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை பணியாளா்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.