
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வு: 12 மையங்களில் 2,212 போ் எழுதினா்
ஈரோட்டில் 12 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வை 2,212 போ் எழுதினா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
ஈரோட்டில் 12 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வை 2,212 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப குடிமைப் பணிகள் தோ்வு (நோ்முகத் தோ்வு அல்லாத பணிகள்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆஸ்ரம் மெட்ரிக். பள்ளி, ஆா்ஏஎன்எம் கலை, அறிவியல் கல்லூரி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏஈடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேளாளா் மகளிா் கல்லூரி, வேளாளா் கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 12 மையங்களில் தோ்வு நடைபெற்றது. இதில் நந்தா கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இத்தோ்வு எழுத ஈரோடு மாவட்டத்தில் 3,889 போ் விண்ணப்பித்திருந்ததில் 2,212 போ் எழுதினா். 1,677 போ் தோ்வு எழுத வரவில்லை. காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் தோ்வு நடைபெற்றது.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 12 ஆய்வு அலுவலா்கள், 4 நடமாடும் குழுக்கள், 12 விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







