கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா

மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 6:56 am IST

மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 
மஞ்சூர் அருகேயுள்ள அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ஆம் தேதி நடக்கும் காவடிப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். 
நடப்பு ஆண்டு அன்னமலை முருகன் கோயிலில் 28ஆம் ஆண்டு காவடிப் பெரு விழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 
விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அன்னமலை தண்டாயுதபாணி முருகன் கோயில் ஸ்தாபகர் கரு கிருஷ்ணா நந்தஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 
இதில் படுகர், மலை வாழ் பழங்குடி மக்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், திருமுருக பக்தர்கள் பேரவை, அன்னமலை கிருத்திகை மகளிர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.