மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மஞ்சூர் அருகேயுள்ள அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ஆம் தேதி நடக்கும் காவடிப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
நடப்பு ஆண்டு அன்னமலை முருகன் கோயிலில் 28ஆம் ஆண்டு காவடிப் பெரு விழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அன்னமலை தண்டாயுதபாணி முருகன் கோயில் ஸ்தாபகர் கரு கிருஷ்ணா நந்தஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் படுகர், மலை வாழ் பழங்குடி மக்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், திருமுருக பக்தர்கள் பேரவை, அன்னமலை கிருத்திகை மகளிர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


