சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காட்டுப் பன்றிகளை கூண்டுவைத்து  பிடிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் குட்டியுடன் உலவும் காட்டுப் பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:44 am

மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் குட்டியுடன் உலவும் காட்டுப் பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
மஞ்சூர் அருகே எமரால்டு, இத்தலார், காந்திகண்டி, கோத்தகண்டிமட்டம், லாரன்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட கிராமப் பகுதிகள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், விளைநிலைம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. 
  இந்நிலையில்,  குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.  
விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.  எனவே, இப்பகுதியில் நடமாடும் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.