பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புழம்பட்டி பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் தொழில் நுட்ப மேலாளர் க.யமுனப்பிரியா வரவேற்றார். 
இதில், பண்ணைக் குட்டையில் கூட்டு மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முன்னோடி விவசாயி ஜோசப் மீன் வளர்ப்பில் தனக்கு கிடைத்த அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார். அஞ்சிகுன்னு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற விவசாயி வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து விளக்கமளித்தார். 
உதவித் தொழில் நுட்ப அலுவலர் சந்தியா, உதவி தோட்டக் கலைத் துறை அலுவலர் அரவிந் ஆகியோர் தோட்டக் கலைத் துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். தொழில் நுட்ப மேலாளர் ஜான்சி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.