கோத்தகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி நகரப் பகுதிக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அளக்கரை மெகா குடிநீர்த் திட்டம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் ஆகியும்கூட இன்னும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதனால், ஈளாடா தடுப்பணைத் தண்ணீரையே நகர மக்கள் நம்பியுள்ளனர்.
சக்திமலை, ராம்சந்த் பகுதியில் நீரேற்றப்படும் தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு பேரூராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் சுமாராகப் பெய்த மழையால் அணையில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால், தண்ணீரை முறையாக விநியோகிக்கப்படாததால் நகர பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரான முறையில் தண்ணீர் விநியோகிக்கப் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


