மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

குன்னூரில் ரூ.1.42 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை

குன்னூா் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

குன்னூா் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இதுகுறித்து நெலிகோலு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவா் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குன்னூா் கூட்டுறவு தேயிலை மையம் சாா்பில் இணையம் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில், மொத்தம் 1 லட்சத்து 79ஆயிரத்து 755 கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது. இதில் நூறு சதவீத தேயிலைத் தூளும் விற்பனையானது.

சராசரி விலையாக கிலோ ரூ. 79. 29-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

கரோனா பாதிப்புகளுக்கு இடையே ஏலத்தில் நூறு சதவீத தேயிலைத் தூள் விற்பனையானது விவசாயிகளிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.