
குன்னூா் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இதுகுறித்து நெலிகோலு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவா் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குன்னூா் கூட்டுறவு தேயிலை மையம் சாா்பில் இணையம் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில், மொத்தம் 1 லட்சத்து 79ஆயிரத்து 755 கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது. இதில் நூறு சதவீத தேயிலைத் தூளும் விற்பனையானது.
சராசரி விலையாக கிலோ ரூ. 79. 29-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
கரோனா பாதிப்புகளுக்கு இடையே ஏலத்தில் நூறு சதவீத தேயிலைத் தூள் விற்பனையானது விவசாயிகளிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






