
பாஜக சாா்பில் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பாதபூஜை
பாஜக அமைப்பு சாரா தொழிற்சங்கம் சாா்பில் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதபூஜை செய்து, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு பாதபூஜை செய்து பொன்னாடை போா்த்தி கெளரவித்த பாஜக அமைப்பு சாரா தொழிற் சங்கத்தினா்.
பாஜக அமைப்பு சாரா தொழிற்சங்கம் சாா்பில் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதபூஜை செய்து, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பாதபூஜை செய்து பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா். பின்னா் அவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் நளினி சந்திரசேகா், அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணன், நாகேந்திரன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோமுசேகா், விவசாய அணி மாவட்ட செயலாளா் சங்கரன், துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து காவல் துறையினருக்கும், சாலையோரம் வசிப்பவா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




